பொத்துவிலில் தொடங்கிய பேரணி பொலிகண்டி பகுதியை அடைவதில் நெருக்கடியை எதிர்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள பொலிகண்டிப் பகுதிக்குள் பேரணில் செல்வதில் நெருக்கடி நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தினை ஏற்றே பருத்தித்துறை நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கோவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.
பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகி கடும் ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராயந்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன், பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்று தடை உத்தரவு வழங்கி கட்டளை வழங்கினார்.
பேரணியில் பங்கேற்போர் கொரோனாத் தொற்று அதிகம் காணப்படுகின்ற கிழக்கு மாகாணத்தில் தொடங்கி அங்கிருந்து பல பகுதிகளுகளின் ஊடாக நகர்ந்து வருவதால்வருவதனால் கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த தடை உத்தரவு வழங்கப்படுகிறது என்று நீதிவான் கட்டளையில் சுட்டிக்காட்டினார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை